2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள் 27இல் இடம்பெறும்’

Editorial   / 2018 நவம்பர் 17 , பி.ப. 04:10 - 1     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நேற்று நடைபெற இருந்த பரீட்சைகள் அனைத்தும் மாகாணம் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்ற நிலையில், இப்பரீட்சைகள் அனைத்தும் எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.

கஜா புயலின் தாக்கம் காரணமாக, வடக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய, நேற்று சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறை தொடர்பில், ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று ஆளுநர் செயலகத்தில் நேற்று  மாலை நடைபெற்றது. 

இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 1

  • R. Kuhananthan Saturday, 17 November 2018 01:47 PM

    அனைத்து பரீட்சைகளையும் 27 ஆம் திகதி வைக்க முடியாது. தரம் 6_9 இற்கு 27 உம் தரம் 10 இற்கு 28 உம் ,தரம் 12, 13 இற்கு 29 ஆம் திகதியுமே நடாத்தப்பட்ட வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .