Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
எம். றொசாந்த் / 2018 நவம்பர் 16 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீண்டகாலமாக குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்து இருந்த பெண் ஒரே சூலில் மூன்று குழந்தைகளை பெற்ற நிலையில் உயிரிழந்து உள்ளார்.
இச்சம்பவம் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று (15) இடம்பெற்றுள்ளது.
சாவகச்சேரி சங்கத்தானை பகுதியை சேர்ந்த இராஜசிறி மாலினி (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த குடும்பபெண் திருமணம் ஆகி நீண்ட காலமாக குழந்தைஇன்றி இருந்த நிலையில், கடந்த வருடம் இந்தியாவுக்குச் சென்று சிகிச்சை பெற்று நாடு திரும்பினார்.
இந்நிலையில் நேற்று (15) பிரசவ வலி ஏற்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூன்று பெண் குழந்தைகளை பிரசவித்தார். அதன் பின்னர் சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago