2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கடற்படையினரின் படகு மோதி மீனவர் உயிரிழந்தார்

Editorial   / 2017 ஒக்டோபர் 01 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

- எஸ். நிதர்ஷன்

காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகுடன் கடற்படையின் படகு மோதிப் படகு கவிழ்ந்ததில், மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய மீனவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரைநகர் கடற்பரப்பில், நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், காரைநகர் வெடியரசன் வீதிப் பகுதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை கேதீஸ்வரன் (வயது 38) என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். அதே இடத்தைச் சேர்ந்த தவராசா சத்தியராஜா படுகாயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, காரைநகர் வெடியரசன் வீதியைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள், நேற்று முன்தினம் இரவு காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது, ஒருவர் கடலில் வலையை வீசிக் கொண்டிருந்துள்ளார் மற்றயைவர் படகில் இருந்துள்ளார். அப்போது கடற்பரப்பில் வந்த கடற்படையின் படகு மோதியதில் படகு கவிழ்ந்துள்ளது.

இரண்டு மீனவர்களும் கடலுக்குள் விழுந்த நிலையில், கணபதிப்பிள்ளை கேதீஸ்வரன் உயிரிழந்துள்ளார். மற்றைய மீனவரான தவராசா சத்தியராஜா படுகாயமடைந்துள்ளார். காயமடைந்தவரை, கடற்படை முகாமின் கடற்படை வைத்திய அதிகாரி, கடற்படையின் அம்பியுலன்ஸ் மூலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத அறையில் ஒப்படைத்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .