2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கடல் சிப்பிகளை எடுத்து சென்றவர் கைது

Editorial   / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

மண்டைதீவு பகுதியில், கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதிப்பத்திரமின்றி கடல் சிப்பிகளை ஏற்றி சென்ற வாகன சாரதி, நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர், ஆணைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் கூறினர்.

மண்டைதீவு பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கடல் சிப்பிகளை எடுத்து செல்வது தொடர்பில் மண்டைதீவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே, குறித்த நபர் கைதுசெய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .