2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கழிவுகள் கொட்டப்படுவதால் பாதசாரிகளுக்கு சிரமம்

Editorial   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

கொழும்புத்துறை - புங்கங்குளம் வீதியிலுள்ள வெற்றுக் காணிகளில் கழிவுகள் தொடர்ச்சியாக கொட்டப்படுகின்றமையால், வீதியில் செல்வோர் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

இப்பகுதியில் வசிக்கின்ற மக்களும் சுகாதார சீர்கேடுகளுக்கு இலக்காகி வருகின்றனர்.

கொழும்புத்துறை கணக்கர் சந்தியிலிருந்து சில மீற்றர் தூரத்தில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் இவ்வாறு திண்மக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

காணிக்குரியவர்கள் புலம்பெயர் நாட்டில் வசித்து வருகின்றனர். அப்பிரதேச மக்களும் வீட்டுக் கழிவுகளை அந்தக் காணியில் கொட்டி வருகின்றனர்.

அதனால், நுளம்புப் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது என, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .