2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

காணி சுவீகரிப்புக்கு எதிராக தீர்மானம்

Editorial   / 2018 ஜூன் 04 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

- டி.விஜிதா

காணி சுவீகரிக்கப்படுவதுக்கு எதிராக நீதிமன்றங்களை நாடி சுவீகரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுப்போம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று (04) யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் காலங்களில் எந்த தேவைக்குரிய காணிகளாக இருந்தாலும், காணி அமைச்சு சுவீகரிப்பு அறிவித்தலை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை விடுப்பதுக்கு முன்னர் மாகாண காணி அமைச்சரின் அனுமதியைப் பெற வேண்டுமெனவும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில்  தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .