2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கால்நடை வைத்தியசாலை உடைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 06 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

இணுவிலில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்ட அரச கால்நடை வைத்தியசாலை, நேற்று (05) திருடர்களால் உடைக்கப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ளதால், குறித்த கால்நடை வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி வைத்தியசாலையின் பிரதான கதவை உடைத்து திருடர்கள் உள்நுழைந்துள்ளனர்.

இதனை அயலவர்கள் அவதானித்து, சத்தமிட்டதையடுத்து, கொள்ளையடிக்காமல், அங்கிருந்து திருடர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

இது தொடர்பில், சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X