2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குடும்பப்பெண்ணை கடத்திய வாகனம் விபத்தில் சிக்கியது

எம். றொசாந்த்   / 2018 டிசெம்பர் 31 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழில் குடும்ப பெண்ணொருவரை கடத்தி சென்றதாக கூறப்படும் ஹயஸ் ரக வாகனம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

யாழ்.புன்னாலைக்கட்டுவான் சந்தியில் நேற்று (30) மாலை குறித்த விபத்து இடம்பெற்று உள்ளது.

கொழும்பில் இருந்து ஹயஸ் ரக வாகனத்தில் யாழ்ப்பாணத்துக்கு வந்த நபர் ஒருவர் சுன்னாகம் பகுதியை சேர்ந்த குடும்ப பெண்ணொருவரை தனது வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளார். அதனை அவதானித்த அவரது கணவர் வாகனத்தை துரத்திச் சென்ற போது புன்னாலைக்கட்டுவான் சந்தியில் எதிரே வந்த வாகனத்துடன் ஹயஸ் வாகனம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

அதேவேளை ஹயஸ் வாகனத்தை துரத்தி வந்த கணவரும் குறித்த விபத்தில் சிக்கியுள்ளார்.

குறித்த விபத்தில் காயமடைந்த கணவனும் கடத்தி செல்லப்பட்டதாக கூறப்படும் மனைவியும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குடும்ப பெண்ணை கடத்தியதாக கூறப்படும் நபரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .