Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 28 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
குடும்பஸ்தரை வெட்டிய சந்தேகநபரை எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் ரீ.கருணாகரன் இன்று(28) உத்தரவிட்டார்.
நேற்று (27) மாலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தம்பதிகளை மறித்து வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட நபர் கத்தியால் குடும்பஸ்தரின் முதுகில் வெட்டியுள்ளார்.
இச் சம்பவத்தில் காயமடைந்த நபர், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகளை மேற்கொண்ட அச்சுவேலி பொலிஸார் நீர்வேலி மத்தி பகுதியினை சேர்ந்த 40 வயதுடைய நபரை கைது செய்திருந்தனர்.
சந்தேக நபரை இன்று (28) மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
28 Mar 2024