2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

குளவிக்கொட்டுக்கு இலக்காகி 14 பேர் படுகாயம்

எம். றொசாந்த்   / 2018 டிசெம்பர் 26 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அளவெட்டி பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 14 பேர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் அளவெட்டி அம்பானை பகுதியில் நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வெற்றுக்காணியை சிலர் துப்பரவு செய்தபோது அங்கிருந்த குளவிக்கூடு ஒன்று கலைந்து துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மற்றும் வீதியால் சென்றவர்களை கொட்டியுள்ளது.

இதில் 14 பேர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

நால்வர் சிகிச்சையின் பின் வீடு திரும்பிய நிலையில் 10 பேரை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக தங்கியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X