2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கூரை உடைத்து நகை கொள்ளை

Editorial   / 2017 டிசெம்பர் 10 , பி.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜிதா 

யாழ்ப்பாண நகரப் பகுதியில் பட்டப்பகலில் வீட்டுக் கூரை உடைத்து 50 பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  

இச்சம்பவம், யாழ்ப்பாணம் பிறவுண் வீதி கலட்டிச் சந்திப் பகுதியில் இன்று (10) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

வீட்டில் உள்ளோர் தேவாலயத்துக்கு சென்றிருந்த நிலையிலேயே, வீட்டுக்குச் சென்ற கொள்ளையர்கள் வீட்டின் கூரையை பிரித்து 50 பவுண் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.  

இது தொடரபில், உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முறைப்பாட்டின் பிரகாரம், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .