2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கேக் நிலையத்தில் 1கி.கி மாவா கைப்பற்றல்

Editorial   / 2018 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், டி.விஜிதா, செந்தூரன் பிரதீபன்

யாழ்ப்பாணம் - ஐந்து சந்திப் பகுதியில், இயங்கிவரும் கேக் விற்பனை நிலையத்தில் இருந்து, ஒரு கிலோகிராம் மாவா போதைப்பொருள் யாழ்ப்பாண பொலிஸாரால் இன்று (20) காலை கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது, மாவா போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்தக் குற்றச்சாட்டில், 45 வயது நிரம்பிய குடும்பஸ்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த கேக் கடையை சுற்றி ​வளைத்து தேடுதல் மேற்கோண்டனர்.

இதன்போது, 30 சிறிய பொதிகளாக பொதிச் செய்யப்பட்ட மாவா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .