Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஜூலை 16 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன், எம்.றொசா்ந்த
நெடுந்தீவு கடற்பரப்பு ஊடாக இலங்கைக்கு, கேரள கஞ்சாவைக் கடத்த முயன்ற இந்திய மீனவர்கள் நால்வரை, காரைநகர் கடற்படையினர் இன்று (16) கைது செய்துள்ளனர்.
ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், சந்தேகத்துக்கிடமான முறையில் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைய முற்பட்ட படகை மறித்து சோதனை மேற்கொண்டனர்.
இதன் போது படகில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 37கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் கைபெற்றப்பட்டன.
கைதான மீனவர்கள் நால்வரும் தமிழக மாநிலத்தினை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களை, பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago