Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Editorial / 2017 நவம்பர் 19 , பி.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன், எம்.றொசாந்த்
ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இருவரை, கொக்குவில் ரயில் நிலையத்துக்கு அருகில் வைத்து, நேற்று (18) இரவு 7 மணியளவில், யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்., கொக்குவில் ரயில் நிலைய வீதியைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 22) மற்றும் ஜசிந்தன் (வயது 22) ஆகிய இருவருமே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் தலைமைப்பீட பொறுப்பதிகாரி ஹேவவிதானகேவின் உத்தரவுக்கு அமையவே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதான இருவரும், சந்தேகத்துக்கிடமான முறையில் அந்தப் பகுதியில் நடமாடியதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், கைதுசெய்யப்பட்ட நபர்களின் அலைபேசியில், வாள்கள் உள்ள படங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கொக்குவில் பகுதியில், அண்மையில் இடம்பெற்ற பெற்றோல் குண்டுவீச்சு, சட்டவிரோதச் செயற்பாடுகள், வாள்வெட்டுச் சம்பவங்களுடன், மேற்படி கைது செய்த இருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற ரீதியில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
19 Apr 2024
19 Apr 2024
19 Apr 2024