2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத கேபிள் ரீவி இணைப்பால் குடும்பப் பெண் உயிரிழப்பு

எம். றொசாந்த்   / 2018 ஒக்டோபர் 28 , பி.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோத கேபிள் ரீவி இணைப்பின் ஊடாகப் பாய்ந்த மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் இந்தச் சம்பவம் இன்று (28) முற்பகல் இடம்பெற்றது.

அதே இடத்தைச் சேர்ந்த இராசநாயகம் லீலாவதி (வயது-55) என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

கேபிள் ரீவி இணைப்பு வயரை அவர் பிடித்த போது, அதனூடாகப் பாய்ந்த மின்சாரம் தாக்கியதிலேயே குறித்த பெண் உயிரிழந்தார் என்று ஆரம்ப விசாரணைகளின் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .