2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிகை அலங்கார நிலையங்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

Editorial   / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

கல்வி அமைச்சினுடைய சுற்றுநிரூபத்துக்கமையவே, புதுக்குடியிருப்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள சிகை அலங்கார நிலையங்கள், மாணவர்களுக்கு சிகை அலங்காரம் மேற்கொள்ளப்பட வேண்டுமென, புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தவிசாளர் செல்லையா பிரேம்காந் தெரிவித்தார்.

அவ்வாறு சுற்றுநிரூபத்துக்கு அமைய மாணவர்களுக்கு சிகை அலங்காரம் மேற்கொள்ளத் தவறும் சிகை அலங்கார நிலையங்களுக்கு எதிராக, உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அவர் எச்சரிக்கை விடுத்தார்.

சில மாணவர்கள் பொருத்தமற்ற முறையில் சிகை அலங்காரம் செய்து பாடசாலைக்குச் செல்வதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்தே, அண்மையில், பிரதேச சபையால் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .