2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

சிப்பாயின் சடலம் மீட்பு

எம். றொசாந்த்   / 2018 ஒக்டோபர் 31 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அருகில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் நேற்று (30) மீட்கப்பட்டுள்ளது.

அனுராதபுரத்தை சேர்ந்த அபயரத்னா (வயது 19) என்பவரின் சடலமே கடற்படை முகாமின் ஆயுத களஞ்சிய வாசலுக்கு அருகில் இருந்து மீட்கப்பட்டது.

அது தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன் போது குறித்த சிப்பாய் தனது துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் கண்டறிந்

தொடர்ந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .