2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிறுவர் தின நிகழ்வுகள்

Editorial   / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

சுன்னாகம் - கலைவாணி முன்பள்ளிச் சிறார்கள் யாழ். சுன்னாகம் பொதுநூலகத்தில், இன்று (01) சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் நடைபெற்றன.

இன்றுக் காலை 09.30 மணி முதல் சுன்னாகம் பொதுநூலக சிறுவர் பகுதியில் சுன்னாகம் பொதுநூலக பிரதம நூலகர்  திருமதி ஜெயலட்சுமி சுதர்சன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன. 

சிறுவர் பகுதியிலுள்ள நூல்களை வாசித்தல், ஆக்கச் செயற்பாடுகளில் சிறார்கள் கலந்துகொண்டதுடன்,  சிறார்களின் குழுப்பாடல் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற்றன.

தொடர்ந்து மேற்படி நிகழ்வில் கலந்துகொண்ட சிறார்கள அனைவருக்கும்  சுன்னாகம் பொதுநூலகத்தினரால் சிறப்புப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .