2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் கோட்டாவின் பங்காளிகள்?

Editorial   / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

கோட்டாபய ராஜபக்‌ஷவை வெற்றிபெறச் செய்வதற்காகவே, சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் போன்றோர் கோட்டாவிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, ஜனாதிபதித் தேர்தலில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளதாக, வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சி.வி.கே. சிவஞானத்தின் அலுவலகத்தில், நேற்று முன்தினம் (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் கட்சி கொள்கையை கைவிட்டு நடந்து கொள்வதாகவும் குறிப்பாக சிவாஜிலிங்கம், டெலோவில் இருந்துகொண்டு, இவ்வாறு நடந்து கொண்ட விதம் ஏற்றுக்கொள்ள முடியாததெனவும் கூறினார்.

அத்துடன், சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக வந்தால், தமிழ் மக்களுக்கு எவ்வாறு ஆலோசனை வழங்குவது என்பது தொடர்பிலும், அவர் கருத்துத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X