2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சீருடை மாற்றத்துக்கு வடக்கில் எதிர்ப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

 

சுகாதார அமைச்சால், நாடு தழுவிய ரீதியில் கொண்டுவரப்பட்ட குடும்ப நல சுகாதார உத்தியோகத்தரின் சீருடை மாற்றத்துக்கு அதிருப்தி வெளியிட்டுள்ள வடக்கு மாகாணக் குடும்பச் சுகாதாரச் சேவைகள் சங்கம், அவற்றை அணிந்துக்கொண்டு, கடமையாற்ற முடியாதெனவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சங்கத்தின் தலைவி சசிகலா பவளலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு முன்னர், சுகாதார அமைச்சு குடும்பச் சுகாதாரச் சேவைகள் சங்க உறுப்பினர்களின் விருப்பு, வெறுப்புகளை ஆராய்ந்து மாற்றம் செய்திருக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள சீருடை மாற்றத்தை, அனைத்து உத்தியோகத்தர்களும் புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எனவே, இது தொடர்பில் மறுபரிசீலணை செய்ய, சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென,  அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .