2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சுவரொட்டி ஒட்டியவர்கள் கைது

Editorial   / 2017 டிசெம்பர் 31 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த், டி.விஜிதா

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை வேட்பாளர் தர்சானின் தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில், இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் , நேற்று (30) அதிகாலை கைதுசெய்யப்பட்டனர்.

யாழ்., கந்தர்மடம் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் வைத்து குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில், தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த போதே, ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் இவர்களைக் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் 21 மற்றும் 26 வயதுடைய இளைஞர்கள் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .