2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘ஜனாதிபதியை ஒருமையில் விளித்து பேசியது தவறு’

எம். றொசாந்த்   / 2018 நவம்பர் 05 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஜனாதிபதியை சுமந்திரன் ஒருமையில் விளித்து பேசியது தவறு. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளெட் அமைப்பின் தலைவருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

யாழில் உள்ள தனது இல்லத்தில் இன்று (05) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வவுனியாவில் நேற்று (04) நடைபெற்ற தமிழரசு கட்சியின் இளைஞரணி மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றும் போது ஜனாதிபதியை ஒருமையில் விளித்து உரையாற்றி இருந்தார்.

எது எப்படி இருந்தாலும் நாட்டின் ஜனாதிபதியை அவ்வாறு விளித்து இருக்க கூடாது.  சரியோ பிழையோ அவர் நாட்டின் ஜனாதிபதி. அரசியல் ரீதியாக அவருடன் கருத்து மோதல் ஏற்படலாம். ஆனால் கீழ்த்தரனமான வார்த்தைகளால் பேசியதை ஏற்க முடியாது”  என தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X