Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
எம். றொசாந்த் / 2019 ஜனவரி 02 , பி.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழில். டெங்கு நோய் தாக்கத்துக்கு உள்ளாகிய குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (01) உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பளை பிரதேச செயலக வீதியை சேர்ந்த வீரசிங்கம் ரவீந்திரன் (வயது 55) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.
தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் பாதுகாப்பு உத்தியோகஸ்தராக பணியாற்றிய குறித்த குடும்பஸ்தர் தொடர்ந்து 3 நாட்களாக கடும் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.
அதற்கு வைத்தியசாலைக்குச் சென்று உரிய சிகிச்சைகளை அவர் பெறவில்லை.
அந்நிலையில் கடந்த 24 ஆம் திகதி கடும் சுகவீனமுற்ற நிலையில் வீட்டில் மயங்கி விழுந்துள்ளார்.
அதனை அடுத்து வீட்டார் அவரை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
கடந்த ஒரு வார காலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (02) சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
டெங்கு நோயின் தாக்கமே உயிரிழப்பு காரணம் என உடற்கூற்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago