2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

டெலோவின் வேட்பாளருக்கு எதிராக முறைப்பாடு

Editorial   / 2018 ஜனவரி 04 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், டி.விஜிதா

 

டெலோவின் வேட்பாளர் ராஜ்மோகனுக்கு எதிராக ஈ.பி.டி.பியின் உறுப்பினர் றீகன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில், நேற்று (03) மாலை முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

ஈ.பி.டி.பியின் உறுப்பினர் றீகனின் பெயரைப் பயன்படுத்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15ஆம் வட்டார வேட்பாளர் ஒருவருக்கு அநாமதேய தொலைபேசியின் ஊடாக அச்சுறுத்தல் விடுத்ததாகத் தெரிவித்தே, இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, அண்மையில், அநாமதேய தொலைபேசி அச்சுறுத்தல் தொடர்பாக, றீகனின் பெயரைப் பயன்படுத்தி, பேஸ்புக்கில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில், அவதூறான செய்திகள் பரப்பப்படுவதாக தெரிவித்து, டெலோவின் வேட்பாளர் ராஜ்மோகனுக்கு எதிராக இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .