2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’த.தே.ம முன்னணியினர் போலித்தேசியம் பேசி வருகின்றனர்’

Editorial   / 2020 ஜூலை 06 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

இலங்கை அரசமைப்பின் ஒற்றையாட்சியைப் பேணி பாதுகாப்போம் என வேட்புமனுவில் உறுதியுரை எடுத்துவிட்டு, ஒரு நாடு இரு தேசம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் போலித்தேசியம் பேசி வருகின்றனரெனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, இவர்கள் கொள்கையில் உறுதியாக இருக்கின்றார்கள் என்றால், உழைப்புக்காக சட்டத்தரணி தொழிலைக்கூட செய்திருக்கக் கூடாதென்றும் கூறினார்.

இது தொடர்பில் அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இலங்கை அரசமைப்பில் ஒற்றையாட்சி அரசமைப்பு என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதென்றும்.  இரு தேசம் எனக்கோசம் போடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஒற்றையாட்சி அரசமைப்பை ஏற்று அந்த அரசமைப்பைப் பாதுகாப்போம் என சத்தியம் செய்தே தற்போதைய தேர்தலில் களம் இறங்கியுள்ளனரெனவும் கூறினார்.

“தங்களது உரைகளில் ஒரு நாடு இரு தேசம் என பேசிவரும் இவர்கள், இலங்கை அரசமைப்பின் இரண்டாம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள ஒற்றையாட்சி முடியரசை பேணிப்பாதுகாப்போம் என்று கையெப்பமிட்டுவிட்டே மக்களிடம் போலிப் பிரசாரங்களை மேற்கொண்டு வாக்குகளுக்காக திரிகின்றனர்.  ஒற்றையாட்சி அரசமைப்பை பாதுகாப்போம் என கையெப்பமிட்டுவிட்டு இவர்கள் என்னத்தை செய்வதற்காக இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்” எனவும், அவர் கூறினார்.

“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணிகள் பலர் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் களம் இறங்கியுள்ளனர் இவர்கள் சட்டக்கல்லூரிகளில் படித்துவிட்டு சட்டத்தரணி தொழில் ஈடுபடும் போது, இதே உறுதிமொழியை அதாவது ஒற்றையாட்சி அரசமைப்பை பேணிப்பாதுகாப்போம் என்று சத்தியப்பிரமாணம் செய்தே சட்டத்தரணி தொழில் ஈடுபட்டு வருகின்றனர்.

“அப்படியானல் உழைப்பதற்கு மட்டும் ஒற்றையாட்சி அரசமைப்பை பாதுகாப்போம் என்ற உறுதியை அரசியலுக்காக ஒரு நாடு இரு தேசம் என்ற போலிப்பிரசாரம் இதுதான் இவர்களின் உண்மை முகம் இவர்கள் உண்மையிலேயே கொள்கையில் உறுதியாக இருக்கின்றார்கள் என்றால் இவர்கள் உழைப்பதற்காகக் கூட ஒற்றையாட்சி அரசமைப்பின் மீது சத்தியப்பிரமாணம் செய்திருக்கக்கூடாது.

“1983 ஆம் ஆண்டு 6ஆவது அரசமைப்பு திருத்த்தின் பின்னர் இலங்கையில் இருக்கின்ற சகல அரசாங்க உத்தியோகத்தர்கள் சட்டத்தரணிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இலங்கை அரசமைப்பை பேணிப்பாதுகாப்போம் என உறுதியுரை செய்யவேண்டும் என திருத்தம் கொண்டுவரப்பட்டது. 

“இதன்போது அமிர்தலிங்கம் போன்றோர் அரசமைப்பின் உறுதியுரை எடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தங்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையைும் இராஜினாமாச் செய்திருந்தார். 

“ஆனால் குமார் பொன்னம்பலம் தாம் சட்டத்தரணியாக கடமையாற்றுவதற்கு இலங்கையில் உறுதியுரை எடுத்தால் மக்களுக்குதெரிந்துவிடும் என்று திருட்டுத்தனமாக மலேசியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் இலங்கை அரசியல் அமைப்பைபேணிப் பாதுகாப்பேன் என்று உறுதியுரை எடுத்திருந்தார் என்பதை மக்கள் இன்றும் நினைவில் வைத்திருப்பார்கள்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .