2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தடுப்புக் காவலில் இருந்தவர் வைத்தியசாலையில்

Editorial   / 2019 மார்ச் 30 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜித்தா

மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் பிளேட்டால் தனது கழுத்தை கீறி தற்கொலைக்கு முயன்ற நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமிதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (29) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் கடந்த மாதம் வீடொன்றுக்குள் புகுந்து தீவைத்தனர், அடாவடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் தேடப்பட்டப்பட்ட சந்தேகநபர்கள் மூவர் நேற்றுக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் தனது சட்டைப் பைக்குள்ளிலிருந்த பிளேட்டை எடுத்து தனது கழுத்தில் 4-5 முறை  கீறிக் கொண்டார்.

சம்பவத்தையடுத்து, சந்தேகநபரை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மானிப்பாய் பொலிஸார் அனுமதித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .