2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தமிழ்த் தேசிய பேரவைக்கு ஆசிர்வாதம்

எம். றொசாந்த்   / 2018 ஜனவரி 02 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையினர் நேற்று  (01) சின்மயாமிஷன் பிரம்மச்சாரிய யாக்கிரத சைதண்யா சுவாமிகள் மற்றும் யாழ். நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பிரம்மச்சாரிய சுவாமிகள் ஆகியோரைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுள்ளனர்.   

யாழ். சின்மயாமிஷன் சுவாமிகள் ஆச்சிரமத்தில் நேற்று  (01) நடைபெற்ற சந்திப்பில், தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ். மாநகர முதல்வர் வேட்பாளர் வி.மணிவண்ணன் தலமையிலான குழுவினர் சுவாமிகளைச் சந்தித்தனர்.

இதன்போது, அவர்களுடன் கலந்துரையாடிய சுவாமிகள், அவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கினார். அதையடுத்து ,நல்லை ஆதீன குருமுதல்வரைச் சந்தித்த தமிழ்த் தேசிய பேரவையினர் நல்லைஆதீனக் குருமுதல்வரிடமும் ஆசிர்வாதம் பெற்றனர்.   

இதேவேளை, யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார் ஆகியோரைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .