2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

திருட்டு: ஒருவர் கைது

Editorial   / 2020 ஜூலை 28 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்து திருடிய குற்றச்சாட்டில், ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி கிழக்கில்,  நேற்று (28) அதிகாலை 6 பவுண் தாலிக்கொடி திருட்டுப் போயிருந்தது.

அது தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், மோப்ப நாயின் உதவியுடன்,  12 மணி நேரத்துக்குள் திருட்டுச் சந்தேக நபரைக் கைது செய்ததுடன், தாலிக்கொடியும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், கிளிநொச்சி - 13ஆம் கட்டையைச் சேர்ந்தவரென்றும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .