2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

திருட்டு குற்றச்சாட்டில் பிடிபட்ட பெண் மீண்டும் கைவரிசை

எம். றொசாந்த்   / 2018 டிசெம்பர் 31 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளிகளிடம் தங்க நகைகளை திருடிய குற்றசாட்டில் வைத்தியசாலை நிர்வாகத்தினரால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பெண் மீண்டும் வைத்தியசாலையில் தனது கைவரிசையை காட்டியுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருவோரின் தங்க நகைகள் களவாடப்படுவது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்துக்கு தொடர்ச்சியாக பல முறைப்பாடுகள் கிடைக்க பெற்றன.

அது தொடர்பில் வைத்தியசாலை வளாகத்தினுள் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் நகைகளை திருடி வந்த பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்டார். அவரை வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் துணையுடன் வைத்தியசாலை நிர்வாகம் மடக்கி பிடித்து வீடியோ ஆதாரத்துடன் யாழ்ப்பாண பொலிஸாரிடம் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்னர் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (29) வைத்தியசாலைக்கு வந்த வயோதிப பெண்ணொருவரிடம் இருந்து சங்கிலி ஒன்று களவாடப்பட்டு உள்ளது. அது தொடர்பில் குறித்த வயோதிப பெண் வைத்தியசாலை நிர்வாகத்திடம் முறையிட்டார்.

அதனை அடுத்து கண்காணிப்பு கமராக்களை பரிசோதித்த போது, முன்னர் வைத்தியசாலையில் நகைகளை திருடிய குற்றசாட்டில் தம்மால் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பெண்ணே மீண்டும் திருட்டில் ஈடுபடுவதனை நிர்வாகத்தினர் கண்டறிந்தனர். அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .