2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

திருநெல்வேலி பொதுச்சந்தை வழமைக்குத் திரும்பியது

Editorial   / 2020 ஜூன் 01 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எம்.றொசாந்த்

 

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் முகமாக, அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பொதுச் சந்தை, 70 நாள்களின் பின்னர் இன்றைய தினம் (01) மீள வழமைக்குத் திரும்பியுள்ளது.

அதிகாலை 5 மணி முதல் சந்தை திறக்கப்பட்டு சந்தை வியாபாரிகள் பொதுமக்கள் சந்தை நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாரும் இராணுவத்தினரும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதைக் கண்காணிக்கும் வேலைத் திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருநெல்வேலி சந்தை அமைந்துள்ள ஆடியபாதம் வீதியானது, காலை 6 முதல் நண்பகல் 12 மணி வரை, ஒரு வழிப்பாதையாக பொதுமக்களை பயன்படுத்துமாறு, பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X