2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

திறந்த போட்டிப் பரீட்சை

Editorial   / 2018 மே 27 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

வட மாகாணத் தமிழ்மொழி மூலப் பாடசாலைகளில் நிலவும் இலங்கை ஆசிரியர் சேவையின் 3ஆம் வகுப்பு 1 (அ) தரப் பதவி வெற்றிடங்களுக்கு, பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய நகரங்களில் எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ளதாக, வட மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் சீ.ஏ.மோகன்ராஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 04ஆம் திகதிக்கு பின்னர் அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரிகள், செயலாளர், மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழு, வட மாகாணம், இல: 39348, கோவில் வீதி, நல்லூர் எனும் முகவரிக்கோ அல்லது 021-2219939 எனும் தொலைஇலக்கத்துடனோ தொடர்பு கொண்டு, அட்டைகளைப் பெற்றுக் கொள்ளமுடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .