2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தீவகத்தில் பொலிஸ் சோதனை சாவடிகளை அமைக்குமாறு கோரிக்கை

எம். றொசாந்த்   / 2019 மார்ச் 12 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீவகத்தில் பொலிஸ் சோதனை சாவடிகளை அமைக்குமாறு வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தீவக பகுதிகளில் மாடுகள் களவாடப்பட்டு சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கப்பட்டு, கடத்தப்படுதல், கற்றாளைகள் தீவகத்தில் இருந்து கடத்தப்படுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

குறித்த சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த தீவகத்தில் அராலி சந்தி, வங்களாவடி பகுதிகளில் பொலிஸ் காவலரண்களை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு வேலணை பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டோர் இன்று (12) பிரதிப்பொலிஸ் மா அதிபரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .