2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தென்மராட்சியில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு

எம். றொசாந்த்   / 2017 செப்டெம்பர் 26 , மு.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். தென்மராட்சி கெருடாவில் பகுதியில், குடும்பஸ்தர் மீது நேற்று (25) தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த கெருடாவிலைச் சேர்ந்த துரைராஜா ரஜீவ் (வயது 35) என்பவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கூலி வேலை செய்து வரும் குறித்த நபர், நேற்று  இரவு எட்டு மணியளவில் வேலை முடிந்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது, வீட்டுக்கு அருகில், இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட குழு பொல்லுகளால் தாக்குதல் மேற்கொண்டதுடன் வாள்வெட்டை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .