2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தேர்தல் தொடர்பாக வேட்பாளர்களுடன் கலந்துரையாடல்

Editorial   / 2017 டிசெம்பர் 25 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) வேட்பாளர்களில் ஒரு பகுதியினரை புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தனது கந்தரோடை இல்லத்துக்கு அழைத்து கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தார். 

இச்சந்திப்பு, நேற்று (24) இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின்போது, தேர்தல் சம்பந்தமான விளங்கங்கள் வழங்கப்பட்டதோடு, தேர்தல் பிரசாரங்களை எவ்வாறு முன்னெடுப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இக்கலந்துரையாடலில், மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .