2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நாகர்கோவில் சம்பவத்தையடுத்து மூவருக்கு மிரட்டல்

Editorial   / 2020 ஜனவரி 19 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த்

யாழ்ப்பாணம் - நாகர்கோவில் பகுதியில், மூன்று இளைஞர்களை முகாமுக்கு அழைத்து மிரட்டிய இராணுவத்தினர், அவர்களைப் புகைப்படம் எடுத்த பின்னர் விடுவித்துள்ளனர்.
 

யாழ்ப்பாணம் - நாகர்கோவில் பகுதியில், புதன்கிழமை (15) அப்பகுதி இளைஞர் ஒருவருக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, இராணுவ வீ​ரர் ஒருவரை குறித்த இளைஞர் தாக்கியுள்ளார்.

அதையடுத்து, இராணுவ வீரரைத் தாக்கிய இளைஞனை தேடி, மறுநாள் (16) அதிகாலை இராணுவத்தினர் ​ சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

எனினும், குறித்த இளைஞர் தலைமறைவான நிலையில், அவ்விளைஞரின் நண்பர்களான நான்கு இளைஞர்களை இராணுவத்தினர் கைதுசெய்து, பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், நேற்று (18) மைதானத்துக்கு விளையாடச் சென்ற இளைஞர் ஒருவரை இராணுவத்தினர் கைது செய்து, முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தது, அவரை புகைப்படம் எடுத்தப் பின்னர் விடுத்தனர்.

அதேபோன்று, வெள்ளிக்கிழமை (17) மாலையும், இரு இளைஞர்களை கைதுசெய்த இராணுவத்தினர், முகாமுக்கு அழைத்துச் சென்று, விசாரணைகளை முன்னெடுத்ததன் பின்னர், அவர்களையும் புகைப்படம் எடுத்து விடுவித்தனர்.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் தற்போது வரை தலைமறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X