2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நடமாடும் சேவை

Editorial   / 2017 டிசெம்பர் 05 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.  கண்ணன் 

தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்கான நடமாடும் சேவை, நெல்லியடி கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் சனிக்கிழமை (09) காலை 9 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறவுள்ளது.

இதன்போது, நெல்லியடி கிராம அலுவலர் பிரிவில் குடும்பப் பதிவைக் கொண்டுள்ள பொதுமக்கள், இந்தச் சேவையை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

16 வயது பூர்த்தியடைந்தும் போதிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் இதுவரை தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளாதவர்களும்
உரிய ஆவணங்கள் இன்றி தேசிய அடையாள அட்டையை திருத்த அல்லது புதுப்பிக்க முடியாதுள்ளவர்களும், தேசிய அடையாள அட்டையை தொலைத்தவர்களும், சேதமடைந்த, எழுத்து கள் தெளிவில்லாத, உருவ வேறுபாடு உள்ள, ஏனைய திருத்தங்கள் (பெயர், முகவரி, பிறந்த திகதி)
செய்ய வேண்டியவர்களும் இதில் கலந்​துகொள்ளலாம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .