2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நீதிமன்ற உத்தரவின் பேரில் பால் உற்பத்தி பொருள்கள் அ​ழிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 15 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

உரிய வெப்பநிலையின்றி களஞ்சியப்படுத்தி, வாகனத்தில் கொண்டுவரப்பட்ட சுமார் 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான பால் உற்பத்தி பொருள்கள், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டன.

காரைநகர் பகுதியில், உரிய வெப்பநிலையின்றி கொண்டுவரப்பட்ட பால் உற்பத்தி பொருள்கள், அப்பகுதி பொது சுகாதாரப் பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டு, சம்பந்த்ப்பட்டோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், குறித்த வழக்கு, வியாழக்கிழமை (12) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றவாளிக்கு 15 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்த நீதவான், கைப்பற்றப்பட்ட பால் உற்பத்தி பொருள்களை அழிக்குடாறும் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .