2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நன்னீர் மீன்பிடி பாதிப்பு

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 ஜூலை 17 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு, வவுனிக்குளத்தில் நிலவும் வரட்சி காரணமாக, நன்னீர் மீன்பிடி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக, நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மாந்தை கிழக்கு - அம்பாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த 110க்கும் அதிகமான குடும்பங்கள், வவுனிக்குளத்தின் கீழான நன்னீர் மீன்பிடியையே, வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், தற்போது நிலவும் கடுமையான வரட்சியால், வவுனிக்குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துக் காணப்படுவதால், நன்னீர் மீன்பிடி பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .