2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நல்லூர் பிரதேச சபையை கூட்டமைப்பு கைப்பற்றியது

எம். றொசாந்த்   / 2018 ஏப்ரல் 04 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் நல்லூர் பிரதேச சபையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சு.வாசுகியை வென்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தாமோதரம்பிள்ளை தியாகமூர்த்தி தவிசாளராக தெரிவாகியுள்ளார்.

நல்லூர் பிரதேச சபைக்கான முதலாவது சபை அமர்வு உள்ளுராட்சி ஆணையாளர் மா.பற்றிக் நிரஞ்சன் தலைமையில் கூடியது.

அதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் த.தியாகமூர்த்தி பிரேரிக்கப்பட்டார். தமிழ் தேசிய மக்கள் முன்னணி க.வாசுகியை பிரேரித்தனர்.

அதனை தொடர்ந்து வாக்களிப்பு மூலம் தவிசாளர் தெரிவு இடம்பெறும் என ஆணையாளர் அறிவித்தார். பகிரங்க வாக்களிப்பு நடைபெற வேண்டும் என பெரும்பான்மையான உறுப்பினர்கள் கோரியதை அடுத்து பகிரங்க வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.

அதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரேரித்த த.தியாகமூர்த்தி 12 வாக்குகளையும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரேரித்த க.வாசுகி 7 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து, உப தவிசாளர் தெரிவின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு இராசமனோகரன் ஜெயகரனை பிரேரித்தது. அதன் போது வேறு யாரும் உப தவிசாளராக பெயரை பிரேரிக்காத நிலையில் உப தவிசாளராக ஜெயகரன் தெரிவானார்.

20 உறுப்பினர்களை கொண்ட யாழ் நல்லூர் பிரதேச சபையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 6 உறுப்பினர்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 5 உறுப்பினர்களையும், சுயேட்சைக்குழு 2 உறுப்பினர்களையும், ஈ.பி.டி.பி 4 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசிய கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி தலா ஒரு ஆசனங்களையும் பெற்றுள்ளது.  இன்று (04) இடம்பெற்ற வாக்களிப்பின்போது, தமிழர் விடுதலை கூட்டணி நடுநிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .