2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நிகழ்விலிருந்து திருப்பியனுப்பப்பட்ட மாணவர்கள்

Editorial   / 2017 ஒக்டோபர் 14 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழில் நடைபெற்ற ஜனாதிபதியின் நிகழ்வில் கலந்துகொள்ளவிடாது, பல மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

அகில இலங்கை தமிழ் மொழி தினம் இன்று யாழ். இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. அந்நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

குறித்த நிகழ்வு இன்றைய தினம் யாழ். இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னதாக செய்யப்பட்டு இருந்தன. இன்றைய தினம் காலை மழை பெய்தமையால் இந்நிகழ்வு கல்லூரி கேட்போர் கூடத்துக்கு மாற்றப்பட்டது.

அதன் காரணமாக மண்டபத்தில் இட நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து, நிகழ்வில் கலந்துகொள்ள வந்த மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் திருப்பி அனுப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X