2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நினைவு தின நிகழ்வு

Editorial   / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

சுப்பையா சபாரத்தினம் அவர்களின் ஓராண்டு நினைவு தின நிகழ்வு, புங்குடுதீவு - அம்பலவாணர் கலை அரங்கில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில், தமிழரசு கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, தமிழரசு கட்சி பொருளாளர் கனகசபாபதி, ,வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பரஞ்சோதி, புங்குடுதீவு - நயினாதீவு பலநோக்கு கூட்டுறவு சங்க  தலைவர் சு .கருணாகரன், தமிழரசு கட்சி மத்திய குழு உறுப்பினர்களான மாணிக்கவாசகர் இளம்பிறையன், முத்துக்குமாரசுவாமி   அகிலன்,  யாழ். மாநகர சபை உறுப்பினர் இமானுவல் தயாளன், வாலிப முன்னணி உப செயலாளர் கருணாகரன் குணாளன், மகளிர் அணி யாழ்மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்களான துஷ்யந்தி, லாவண்யா, வேலணை  பிரதேச சபை  உறுப்பினர் கருணாகரன் நாவலன், தமிழரசு கட்சி தீவக மூலக்கிளை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.. 

இதன்போது, சபாரத்தினம் கேதீஸ்வரனின் நிதியுதவியூடாக  200 முன்பள்ளி மாணவர்களுக்கும்  21 ஆசிரியர்களும் கற்றல் உபகரணங்கள் அடங்கிய பரிசில்களும் மூன்று விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .