2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நியதிச்சட்ட அறிக்கையை சமர்ப்பித்தார் சி.வி

Editorial   / 2017 டிசெம்பர் 05 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

2018ஆம் ஆண்டுக்கான வடமாகாணத்தின் ஒதுக்கீட்டு நியதிச்சட்ட அறிக்கை, இன்று (05) வட மாகாணசபையில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் முன்மொழியப்பட்டது.

வட மாகாண சபையின் 116ஆவது அமர்வு, கைதடியிலுள்ள பேரவைச்செயலகத்தில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று (05) நடைபெற்றது.

இதன்போதே, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாணத்தின் 2018ஆம் ஆண்டுகான நிதிக்கூற்று நியதிச்சட்ட அறிக்கையை சபையில் முன்மொழிந்தார்.

இதன் மீதான அமைச்சுகளின் விவாதம் எதிர்வரும் 12, 13, 14ஆம் திகதிகளில் இடம்பெறும் என, அவைத்தலைவரால் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X