2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

நீதிமன்றிலிருந்து தப்பிச் சென்றவருக்கு விளக்கமறியல்

எம். றொசாந்த்   / 2018 பெப்ரவரி 20 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் நீதிமன்றிலிருந்து தப்பிச் சென்ற, பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர், சுமார் 6 மாதங்களின் பின்னர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று (19) யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து, சிறைச்சாலை காவலிலிருந்து தப்பித்த குற்றத்துக்கான தண்டனைத் தீர்ப்பு புதன்கிழமை (நாளை 21) வழங்கப்படும் என தெரிவித்த யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன், அதுவரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவு, ஊர்காவற்றுறை உள்ளிட்ட பல பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபரே இவ்வாறு தப்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .