2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நெற்கதிர் அறுவடை விழா

Niroshini   / 2021 ஜனவரி 27 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எம்.றொசாந்த்

நல்லூர்க் கந்தன் சுவாமி கோவிலில், இன்று (27) நெற்கதிர் அறுவடை விழா நடைபெற்றது.

தைப்பூசத் தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில், வழமைபோல், கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் இணைந்து, முதலாவது கதிரை அறுவடை செய்வதற்கு கோவிலுக்குச் சொந்தமான மட்டுவிலிலுள்ள வயலுக்குச் சென்று, அறுவடை செய்தனர்.

அந்த நெல்லில் இருந்து அமுது தயாரித்து, கந்தனுக்குப் படையல் செய்து, பூசைகள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து, பக்தர்களுக்கும் அமுது வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .