Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 24, புதன்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். நிதர்ஷன்
வடமராட்சி பருத்தித்துறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன மீனவர்களை தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென பொலிஸார் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனாலும் அந்த மீனவர்களை பொலிஸாரிம் ஒப்படைக்க முடியாதென்றும் தமது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், அங்கு வந்த காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்காவிட்டால் விசேட அதிரடிப்படையின் களமிறக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்த நிலையில் திடிரென தடுத்து வைக்கப்பட்டிருந்த மீனவர்களை பொலிஸார் அழைத்துச் சென்றனர்.
இதனால் மேலும் குழப்பம் அதிகரித்ததுடன் பொலிஸார் மற்றும் அப்பகுதி மீனவர்களுக்கிடையே முரண்பாடுகளும் ஏற்பட்டு பதற்றமானதொரு சூழல் நிலவியது.
இதேவேளை தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டுப் பேர்களில் ஆறு பேரை பலவந்தமாக பொலிஸார் மீட்டுச் சென்றனர். ஏனைய இரண்டு பேரையும் பொலிஸாரால் மீட்க முடியவில்லை. இதனையடுத்து அங்குள்ள அருட்தந்தை ஒருவர் மூலமாக ஏனைய இரண்டு பேரையும் பொலிஸாரிடம் அப்பகுதி மீனவர்கள் ஒப்படைத்தனர்.
இவ்வாறு குழப்பங்கள் ஏற்பட்டிருந்த போதிலும் அங்கிருந்து பொலாஸார் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அங்கு நின்ற அப்பகுதி மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் பலரும் புகைப்படங்களையும் காணொளிகளையும் எடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago