2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பஸ்களில் இருந்த டீசல், டி.வி கொள்ளை

Editorial   / 2020 ஏப்ரல் 06 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் - கோண்டாவில் டிப்போவில் தரித்து நின்ற இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான ஆறு பஸ்களில் இருந்த டீசல் திருடப்பட்டுள்ளதாக, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்கள் அனைத்தும், கோண்டாவில் பஸ் நிலையத்தில் தரித்து வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தரித்து நின்ற 6 பஸ்களில் இருந்து, டீசலும் ஒரு பஸ்ஸில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டியும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .