2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பிரதேச சபை அமர்வில் ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் ரவிசாந்

 வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட அங்கிகாரத்துக்கான விசேட அமர்வுக்குச் செய்தி சேகரிக்கச் சென்ற சுயாதீன ஊடகவியலாளர் ஒருவருக்கு, சபை தவிசாளரால் அனுமதி மறுக்கப்பட்டது.  

வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் அங்கிகாரத்துக்கான விசேட அமர்வு, சபை மண்டபத்தில், இன்று (04) நடைபெற்றது. 

 இதன்போது, குறித்த அமர்வு தொடர்பான செய்திகளைச் சேகரிப்பதற்காகச் சென்ற சுயாதீன ஊடகவியலாளர் ஒருவருக்கு, சபை தவிசாளர் கருணாகரன் தர்ஷனால் அனுமதி மறுக்கப்பட்டது.  

 பின்னர், குறித்த ஊடகவியாளரை அழைத்த தவிசாளர், நடந்த விடயங்களுக்கு அவரிடம் வருத்தம் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .