2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

புத்தர் சிலை உடைப்பு; மது போதையில் இளைஞன் கைது

Princiya Dixci   / 2021 மே 03 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரிமலை, நல்லிணக்க புரம் பகுதிக்கு அண்மையில் புத்தர் சிலையை உடைத்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர், நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.  

கைதுசெய்யப்பட்ட இளைஞன், அப்பகுதியில் இருந்த புத்தர் சிலையை உடைத்ததுடன், அப்பகுதியில் காணப்பட்ட பழைய இரும்புகளையும் சேகரித்துள்ளார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அறிந்த கொண்ட காங்கேசன்துறை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதிக்கு விரைந்து, இளைஞனைக் கைது செய்துள்ளனர்.

இளைஞன், காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

இளைஞன் மது போதையில் காணப்படுவதால் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க முடியவில்லை என காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .