2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புஷ்பரட்ணத்தின் சிறப்புரையை கேட்க அழைப்பு

A.K.M. Ramzy   / 2021 ஏப்ரல் 25 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்ப் பௌத்தம் - ஒரு தொல்லியல் நோக்கு என்ற தலைப்பிலான விசேட சமூக விஞ்ஞானப் படிப்பு வட்ட கலந்துரையாடல் நாளை  திங்கட்கிழமை பி.ப.4 மணியளவில் இல.62, கே.கே.எஸ். வீதி, கொக்குவில் சந்தி என்ற முகவரியில் இயங்கிவரும் தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

 இக் கலந்துரையாடலின் தொடக்க உரையினை இளம் ஆய்வாளர் ச. சத்தியதேவன்  ஆற்றவுள்ள துடன், சிறப்புரையை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் ஆற்றவுள்ளார். இச் சிறப்புரையினைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெறும். ஆர்வமுள்ள அனைவரையும் போதிய சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கலந்துகொள்ளுமாறு சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தினர் அழைப்பு விடுக்கின்றனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .