2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘பொதுக் கூட்டணிக்கே எமது ஆதரவு’

Editorial   / 2017 டிசெம்பர் 10 , பி.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன் 

“மக்கள் ஆணைக்குப் புறம்பாக கூட்டமைப்பு செயற்படுவதால், புதிதாக உதயமாகியுள்ள பொதுக்கூட்டணிக்கு எமது ஆதரவை வழங்க வந்துள்ளோம்” என, ஈரோஸ் ஜனநாயக முன்ணனியின் செயலாளர் இராஜேந்திரன் தெரிவித்தார். 

யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 

“தனித்துவமான கூட்டணியாக அது செயற்படும்போது, எமது பூரண ஆதரவாக இருக்கும். தொடர்ந்து எமது ஆதரவை நல்குவோம். 

“மேலும், எமது கட்சியினர் புதிய கூட்டணியில் கிழக்கு மாகாணத்திலும் வன்னி மாவட்டத்திலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளோம்” எனத் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X